Sunday, June 26, 2016

இருதயத் தியானம்

இரவு இரண்டு மணி
இதயத்தியானம்

திருமிகு அனுராதாவின் பதிவு
__________________________

இரண்டு = இரு அண்டு

அன்பாய் இரு

அன்பை உணரும் விழிப்பின் கூர்மையாம் அறிவை அண்டு

அண்டு = நெருங்கு

அன்பாய் இரு
அறிவை அண்டு
இந்த இரண்டு கண்மணி கொண்ட
இரவிலும் இருதய விழிப்பு
மயமான சுயம் நினக்கு
சுயம்பு அருளும் இன்பம் உண்டு
அவ்வின்பம் அள்ளி உண்டு
முச்சுயம்பு தேகம் கொண்டு
ஊருக்குச் செய்வாய் தொண்டு

இருதயத்தியானம்

இருதயத் தீ ஞானம்
இரவில் நடுப்பகலாய் மூளும்
இரண்டு கண்மணி அன்பும் அறிவும்
திரண்டு விழித்திரு
பசித்திரு
தனித் திரு சுயம்பு அண்டு
கூடிப் புணரும் இன்பம் உண்டு

தனித் திரு = ஈடு இணையற்ற ஏகத்திரு

No comments:

Post a Comment