அகநடு இருதயஞ் சுத்தமோ சுத்தம்
இருதயத் திறப்பால் அகமதும் ஆகுஞ்
சுத்தமோ சுத்தம் புறத்தும் வழியுஞ்
சுத்தமோ சுத்தம் முடிவில் அனகம்
அகமிலாப் புறமிலா அகண்ட அனகம்.
புறமது விட்டு அகத்தே பயணம்
ஒடுங்க இல்லை. அகப்புறச் சுருக்கம்
ஒழித்து அனகமா கவேஇப் பயணம்
நீயது வாகத் தீரும் ஒடுக்கம்
யாமென அனகம் அகண்டே இருக்கும்
சுயத்தின் சுருக்கம் நீங்கச் சார்வாய்
சுயம்பை. சுயமும் ஆகுஞ் சுயம்பாய்.
புறம் பூதாகாரமாக இருப்பதால் தான் அதிலிருந்து விடுபட, அகத்தைச் சாரும் அகத்தவம். அகத்தைச் சார, அகப்புறப் பேதமும் நீங்கி சுயம்பு அகண்டமாய் அனகமாய் இருக்கும்.
No comments:
Post a Comment