Sunday, June 26, 2016

குரு =கூர்

சுயம்பின் கூரிய விழிப்பில் சுயம் நீ கூடியிரு.

குரு = க் உ ர் உ = க் உ உ ர் = க் ஊ ர் = கூர்

குருவாகிய அக் கூர் தன்னில் சுயம்பு குருக் கூர் ஒன்றே இருக்க முடியுமாதலால், அக் கூர் தன்னில் நீ கூடும் போது, கூர் ஒன்றான அச்சுயம்பு குருவாகி விடுவாய் நீ. சுயம் நீ ஒளிக்கப் பட்டு, சுயம்பு ஒளியாகி விடுவாய்.

கூர்மையில் புள்ளியுங் கரைய
ஓர்மை அனக அகண்ட சுத்த வெளி
ஓர்மையெங்கும் கூர்மை ஒளி

விழிப்பு மழுங்காத அக் கூர் மையில் எக்கணமும் இரு.

*சுயம்*பு

*சுயம்*பு வில் கூர்மையாகட்டும் *சுயம்*

சுயம் சிறிய மழுங்கிய விழிப்பு

சுயம்பு பெரிய கூரிய விழிப்பு

சுயம் நீ உன்னைச் சுயம்பில் தேய்த்துத் தேய்த்து, உரசி உரசி, உன் விழிப்பைக் கூர்மையாக்கு.

நீ முழுதாய்க் கூரானதும், ஒரே இடத்தில் இரண்டு கூர்கள் இருக்க முடியாததால், சுயம்புக் கூர் சுயம் உன்னைத் தனித்தன்மையுள்ள கூராக்கி சுயம்புவாக்கி உமிழ்ந்து விடும்.

குரு =கூர்

No comments:

Post a Comment