சுயத்தின் உள்ளீடாகிய சுயம்பே சுயத்தின் குரு
சுயத்தின் உள்ளீடல்லாத எச்சுயமும் சுயத்தின் குருவாக முடியாதப் புறவுரு.
புறவுருவைக் குருவென்பதால், சுயத்தின் உள்ளீடாஞ் சுயம்பு மறைக்கப்படுகிறது, மறக்கப்படுகிறது, மறுக்கப்படுகிறது, வெறுக்கப்படுகிறது. இது சுயந் தன் பேரழிவை வரவேற்பது.
கவனம்.
சுயத்தின் உள்ளீடு சுயம்பு ஒன்றே குரு.
சுயமென் உள்ளீடு
சுயம்பு குருவுக்கில்லை
ஈடு
நாகு வணக்கம் போட்டுச்
சென்று விட்டது.
சுயம்பு வணக்கம் இட்டு
உம்மை உம்முள் இட்டுச்
செல்லுது
சுயம்பின் பின் தொடர்வீர்
'சுயம்'
'சுயம்'புவில்
அடங்கியுள்ளதைக் கண்டு
தன் உள்ளடக்கமான
சுயம்புவில்
தானே விரும்பி அடங்கினால்
அனகச் சுயம் பூ
மலர்வெடி!
No comments:
Post a Comment