Sunday, June 26, 2016

இரு தயம்

இரு தயம்

ஒரு தயம்
சுயம்
சுத்தம்

மறு தயம்
சுயம்பு
சுத்தமோ சுத்தம்

சுயமுஞ் சுயம்புஞ் சேர்ந்ததே
இருதயம்

சுயந்தான் சுயம்பைப் பிரிந்ததால்
பிறந்ததே
கருமனம்

ஒருமனமாகிச்
சுயந்தான் சுயம்பொடு சேரக்
கரையுங் கருமனம்

தெரியும்
திரைகளின்றித் திறந்துள
இருதயம்

🙏🙏💚
சுயம்+சுயம்பு=இருதயம்

மேலே படியுங்கள்
நன்றி திருமிகு அனுராதா

No comments:

Post a Comment