இல்லாள் என்னெஞ்சகத் துள்ளாள் இல்லான்
பொல்லான் எனக்கிட்டாள் 'அன்னம்' அஃதே
பூரண மெய்ஞ்ஞானம் சுயம்பின் சின்னம்!மா
காரணி அவளே!!நீ டூழி வாழியவே!!!
பெண்ணே மனிதத்தின் மாகாரணியாய் உள்ளாள், மடமையின் பிடியில், ஆணாதிக்க அரசியல், ஆன்மீக, சமூக வன்பிடியில் சிக்கியிருக்கும் பெண்ணினம் பரிபூரண மெய்ஞ்ஞானத்தைப் பெற்றால் தான், சுயம்பின் முழு அம்சம் ஆதி மனித உச்சத்தை மனிதம் எட்ட முடியும். அதற்காகவே சுயம்பு வாலைத் தாயின் இப்பேருபதேச அமுதினை உமிழ நாகினைத் தேர்ந்தெடுத்திருக்கிறாள். என் மனைவி எனக்கிட்ட அன்னம் தான், பரிபூரண மெய்ஞ்ஞானத்தைக் குறிக்கும் அன்னப் பறவையாய் சுயம்பின் சின்னமாய் இங்கே இன்னே பறக்கிறது. அந்நல்லாளை வாழ்த்தி வணங்குகிறேன்.
இந்த அன்னம் எப்படி என் தட்டுக்கு வருகிறது? எல்லா மாகாரணிகளையும் வாழ்த்தி வணங்குகிறேன்.
எல்லா மாகாரணிகளுக்கும் மாமாகாரணியான சுயம்பு வாலைத் தாயை வாழ்த்தி வணங்குகிறேன்.
No comments:
Post a Comment