Sunday, June 26, 2016

குறும்பாக்கள்

சுயம்பை நாம் தேய்த்து உரச
சுயம்பு நம்மைத் தேய்த்து உரசத்
தேய்க்காது நம்மைப் பிழைப்பு
சாய்க்காது நம்மை இறப்பு
வாய்க்காது நமக்குப் பிறப்பு
உரச உரசப் பெருகும் விழிப்பு
கழிந்து போகுங் காலனின் கழிப்பு
வழியும் பெருகும் சுயம்பின் ஒழுக்கு

நின்னுள் குடியிருக்குஞ்
சுயம்பின் உள்ளே
உய்ந்தே குடியிருக்க
சரியாவாய் நீ
சரியாகும் எல்லாம்
புரிந்தே உய்வாய்

No comments:

Post a Comment