Sunday, June 26, 2016

சுயம்பு அருள்வாக்கு 5

உமக்கு யாம் கொடுத்த பொருள் எது?

உம் மெய்

உமக்கு யாம் கொடுத்த அருள் எது?

அம்மெய்யை உயிர்த்திருக்க வைக்கும் உம் உயிர்

மெய்யைப் பொருள் படுத்தாமல், உயிரை இலட்சியம் செய்யாமல் இருந்தால், மெய்க்கு மெய்யான உயிர்க்குயிரான எம்மை எப்படி உணர முடியும்

பொருளாகிய மெய்யில் அருளாம் உயிராய்ச் சேர்ந்திருக்கும் இறை எம் புகழ் புரிந்தாயானால், இருள் சேர் இரு வினைகளாகிய இன்ப துன்பக் கருமங்கள் உன்னைச் சேராது. திருவள்ளுவர் வாய்மையை உணர்க, உய்க

பொருள் படுத்து சுயம்பு எம்மை
மெய்யுள் இருதய நடுவுள்
அருள் உயிர் சுரக்கும் உண்ணாமுலை திறக்கும்
உண் மையுண்டு மெய்யும்
அண்ணாமலையாகும்
ஜோதி ஜொலி ஜொலிக்க

உயிர்த்திருக்கும் மெய்யிருக்கு.
மெய்யைப் பொருள்படுத்து.
உயிர்மேல் இலட்சியம் வை.
எம் அருள் சுரக்கும்.
உயிர் பிறவா உயிர்நிலையடையும்
மெய் இறவா மெய்ந்நிலையடையும்
உம் கருநிலை எம் அருள் வாக்கிது

No comments:

Post a Comment