Sunday, June 26, 2016

அன்பு, அறிவு, இன்பு

இருப்பு = existence
விழிப்பு = awareness
இன்பு = bliss

இருப்பு+விழிப்பு = இன்பு

இருப்பு இருந்தும் விழிப்பு கூடவில்லை என்றால், இன்பம் இல்லை.

அழியாத இருப்பின் ஒவ்வொரு புள்ளியிலும் விழிப்பு கூராகிக் கூடும் போது குறையாத இன்பம்

அறிவுக் கூர்மை கூடாத வரை, அன்பின் பேரிருப்பால் அகண்ட தன்மையால் உனக்கு எந்த இலாபமும் இல்லை.

அன்பின் அகண்ட விரிவும், அறிவின் கூர்மையும் பிரியா நிலையில் கூடிப் புணர, உனக்கு இன்பமோ இன்பம் என்னும் அரும்பெரும் இலாபம்

அன்பை உணரா அறிவு அறிவேயல்ல.

அறிவைக் கூர்மையாக்கா அன்பு அன்பே அல்ல.

அறிவல்லா அறிவால், அன்பல்லா அன்பால், நீ அடையும் இன்பமும் இன்பமே அல்ல.

அறிவல்லா அறிவு = உண்ண முடியாத ஏட்டுச் சுரைக்காய் = paper vegetable
அன்பல்லா அன்பு = பந்த பாசம் = sentimental affection
இன்பமில்லா இன்பம் = காமம் = lust

அறிவு = அன்பை உணரும் விழிப்பின் கூர்மை

அன்பு = விழிப்பை அறிவைக் கூர்மையாக்கும் அகண்ட தன்மை

இன்பு = அகண்ட தன்மையும் கூர்மையும் கூடிப் புணரும் சிவகாம நிலை

அன்பு = சத்து
அறிவு = சித்து
இன்பு = ஆனந்தம்
அன்பறிவின்பு = சச்சிதானந்தம்

No comments:

Post a Comment