Sunday, June 26, 2016

சரணங்கள்

தாயுந் தந்தையு மானீர்
ஏக குருவு மானீர்
மையம் இருதயத் துள்ளீர்
தேவம் சுயம்பு சரணம்

தேட வேண்டாம் உம்மை
நானும். என்னகத் துள்ளீர்
இருதய விளக்க மானீர்
சுயம்பு தேவே சரணம்

எல்லாம் வல்லீர் நல்லீர்
பொல்லாக் கருமந் தீர்ப்பீர்
ஒன்றாந் தரும மானீர்
செம்மைச் சுயம்பே சரணம்

சரணங் கல்லா என்னை
சரணஞ் சொல்ல வைத்தீர்
கரண சுத்தஞ் செய்தீர்
சரணம் இருதய தேவே

ஒன்று மாகாத் துச்சன்
என்னைத் தூக்கி முத்தம்
இட்டே உச்சம் வைத்தீர்
நெஞ்சத் துள்ளீர் சரணம்

திக்கு மென்னை ஞான
உச்சம் பேச வைத்தீர்
மிச்ச மின்றி உமது
மொத்தந் தந்தீர் சரணம்

விற்குங் கடைகள் தம்மில்
கிட்டா ஞான உச்சங்
கிட்ட நெஞ்சைத் திறந்தீர்
ஒப்பில் லீரே சரணம்

பேசிப் பேசி வாசி
தீரச் சாயும் உயிரை
என்நா பூட்டி மீட்டீர்
உள்ளீ டானீர் சரணம்

ஞான முழுமை எனது
ஜீவ உரிமை என்றே
பேசும் வாலை அன்னே
ஏக தேவே சரணம்

இறுமென் உடம்பைத்
திருமெய் யாக்கி
இறுமென் உயிரை
இரும்நிலை யாக்கி
இருமனப் பேயை
இருதயம் ஊதி
நற்சே யாக்கி
என்னை ஆண்ட
மன்னே சரணம்

அன்னே = அன்னையே
மன்னே = நிலை நிற்கும் மன்னனே
இறும் = இற்றுப் போகும்
இரும் = இருக்கின்ற அல்லது இருப்பாயாக

No comments:

Post a Comment