Saturday, June 25, 2016

சில குறும்பாக்கள்

தொலைந்து போனது நாகம்
பகிரங்கமானது பரம இரகசிய
சுயம்பு நானெனும் நானாய்

செம்மைச் சுயம்புவின் செந்தண்மையால்
வெண்மையானது நெற்றி
பொன்மையானது மெய்யும்
பசுமையானது உயிர்மை

வற்றா நீர்மையால்
தண்மையானது
வெம்மை

தலை குளிர
தயவு கங்கை கொட்டத்
தணிகிறது கொதிப்பு

சுயம்பு ஊற்று
இருதய நடு பிளந்து
15 உலகங்களும் வெள்ளக் காடு

காணாமல் போனான் கால புருஷன்
எங்கே திரும்பினும்
சுயம்புவின் திரு முன்

பேய்கள் நம்மை சேய்களாக்கித்
தாய்ப்பால் ஊட்டுஞ்
சுயம்புத் தந்தை

பேருக்கு முன்னே பெரிதாய் நான் போட்ட என்னை
ஊருக்கு உபதேசியாக்கி நாகத்தின் வாயால்
யாருக்கும் ஞானப் பால் புகட்டச் செய்தது சுயம்பு

நாகமாய்ப் புலப்படுஞ்
சுயம்பு நான்.
நாகப் புறவுரு அலட்சியஞ் செய்து
தேகத் திடைநடு இருதய வாயுள் இலட்சியம் வைக்க
ஏகக் குருவெனுஞ் சுயம்பு நீயும்

புறவுரு போற்றுங் குருட்டுத் தனத்தால்
புறநெறி பற்பல பற்றியும் நினக்குப்
பிறவா ஞானம் அகக்குரு சுயம்புவை
மறவா அகநெறி பற்றநின் கையகம்

No comments:

Post a Comment