Sunday, June 26, 2016

சுயம்பு அருள்வாக்கு 6

இருதயச்
சீரகஞ்ஜீவியாய்
சத்துணவு உண்டு
சித்துணர்வு கொண்டு
இன்புடலை அண்டு

சிற்றறிவுச் சிரசுஞ்
சித்துணர்வு உரசப்
பேரறிவு ஜீவியாகும்
சிரம் மண்ணாய் இறாச்
சிரஞ்ஜீவியாவாய்

சகஞ்ஜீவியாய் இருந்தும்
சஞ்ஜீவியாகிச்
செத்தாரை எழுப்புவாய்

பெருவாழ்வென்னும்
வானறமாய்
உன்னை பூமியில் நட்டு விட்டால்
சுயம்பு எம் பதினாறாம் அருளாதாரச்
சத்தியப் பேருலகம்
பூமியெங்கும் அகண்டு விடும்

உன் அனுமதி வேண்டுகிறோம்
இருதய நடுச் சுயம்பு யாம்

No comments:

Post a Comment