மூடிய அமைப்பாய் நான் அழியாமலிருக்க என்ன வழி, சுயம்பே?
எம்மை மறைக்கும், மறக்க வைக்கும் ஆத்திகம் என்னும் புறவுருத் தூல நாட்டமும்
எம்மை மறுக்கும் வெறுக்கும் நாத்திகம் என்னும் பொருள் முதல் பரிணாம வாதமும்
மொத்தமாய்க் கைவிட்டு உயிர்த்திருக்கும் உன் புறவுரு மெய்யுள் உன்னுயிர்க்கு உயிராய் உன் மெய்க்கு மெய்யாய் இருதய நடுவில் விழித்திருக்கும் சுயம்பு எம்மை முழு மனதுடன் இருதய பூர்வமாய்க் கைக்கொள். அப்போது மூடிய அமைப்பிலிருந்து எம்மால் நீ விடுவிக்கப்பட்டு திறந்த அமைப்பில் மலர்வெடி முச்சுயம்பு ஆவாய்.
யாம் சொல்வது meta science எனும் மீ அறிவியல், பேரறிவியல். தன்னல இறுக்கத்தால் தனித்தன்மைகள் அழியுங் கருந்துளைகளும், பொது நல இளக்கத்தால், தனித்தன்மைகள் முச்சுயம்புகளாகும் மலர் வெடிகளும் பேரண்டத்தில் உருவாகின்றன. எம் அறக்கருணை திறந்த அமைப்புகளான மலர் வெடிகளையும், விதைக்கப்பட்டு எதிர்வினையாகும் மறக்கருணை கருந்துளைகளையும் உருவாக்குகின்றன.
No comments:
Post a Comment