இன்று ராஜா அவர்களின்
சுயம் பாயிரம்
சுயம்பு ஆயிரம்
பதிவு தொடர்புள்ள சுயத்துக்கும் சுயம்புக்கும் உள்ள இன்றியமையா நெருக்கம் பற்றிய புதிய வெளிப்பாடு வந்துள்ளது. அன்பர்கள் கவனிக்கவும், சுயமாகிய தனித்தன்மையையும், சுயம்பாகிய கடவுட்தன்மையையும் ஒருங்கே மதிப்போம்.
சுயம்பா இறும்?
இறாது
எனவே
சுயம்பாய் இரும்.
சுயம்பாய் இருப்பீர்
சுயம் உமது
முச்சுயம்பாக
வழி செய்வீர்
சுயம்பா இறும்?
சுயம்பாய் இரும்
இதுவும் ராஜா அவர்களின் அரும்பதிவு. அவருக்கு மீள என் நன்றி.
அணுவின் சிறு துகளாக இருக்கும் நம் சுயம் என்னுந் தனித்தன்மையை சுயம்பு மதிக்கிறார்.
சுயம் ஆகிய நாம், சுயம்புவை மதிக்கிறோமா?
சிந்தியுங்கள்.
'சுயம் பாயிரம்' ஆகிச்
சுயம்புவுள் திரும்ப
'சுயம்பு ஆயிரம்'
சுயம்புவுள் திரும்ப
மறுக்குஞ் சுயம்
இறும்
மலர்வெடி முன்னது
கருந்துளை பின்னது
இருப்பாயா
இறுவாயா
மீ அறிவியல் முனைவராகு
இறாமல் இருப்பாய்
இறவாப் பிறவாச் செம்பொருளாகிச்
சிறப்பாய்
பேரண்டத்தில் கருந்துளைகளும் மலர்வெடிகளும் தாமே உருவாவதில்லை
சுயம்பை விட்ட சுயங்கள் கருந்துளையாய் முடிகின்றன.
சுயம்பைத் தொட்ட சுயங்கள் மலர்வெடியாய் விடிகின்றன.
இது மீ அறிவியல் என்னும் பேரறிவியல்
சுயம்பை விட்டால் தன்னல இறுக்கம்
சுயம்பைத் தொட்டால் பொதுநல இளக்கம்
தன்னல இறுக்கம் மூடிய அமைப்பாய் முடியும்
பொதுநல இளக்கம் திறந்த அமைப்பாய் விடியும்
Closed system is entropy driven, disorder and death oriented self-destructive collapsing system
Open system is syntropy or divinemost driven, order and life oriented self-sustaining expanding system
எந்த அமைப்பில் நாம் இருக்கிறோம் என்பது தெரிகிறதா?
எந்த அமைப்பில் நாம் இருக்க வேண்டும் என்று புரிகிறதா?
நாம் இறவா, சுயம்பு நம்மை வெளிப்படுத்தினார்?
இல்லவே இல்லை.
நாம் இறவாப் பிறவாப் பெருவாழ்வெனுன் முச்சுயம்பு நிலை பெறவே, அவர் நம்மை வெளிப்படுத்தியுள்ளார்.
புரிவோம், உய்வோம்.
No comments:
Post a Comment