Saturday, October 8, 2016

ஓர் அவசர அறிவிப்பு

கருநிலை
ஒளிவு மறைவின்றி
இருதய நடுவினின்று
அனகமாய் அகண்டு
ஆதிச் சுயம்புத்
தந்தையாம் நிச்சயமானது

உயிர்
தன்னை அறிந்து
தன் ஐ தலைவனாம்
ஆதிச் சுயம்புத் தந்தையை அறிந்து
உயிர்நிலை அனகமாய் அகண்டு
போதிச் சுயம்புத் தாய்மையாம்
நித்தியமானது.

உயிர்நிலைத் தாய்மை
கருநிலைத் தந்தை சமேதமாய்
மெய்யைச் சேயாக்கி
மெய்யின் ஒவ்வோர் அணுவும்
ஜோதிச் சுயம்புப் பிள்ளையாய்
அகண்டு அனகமாய் வெடிக்க
சுயம்பு ஆயிரம் என்னும்
அனந்த ஜோதி சுயம்புகள்
உண்டாகும் பேரற்புத இரசவாதம்
நிகழ்த்தி மெய்த்திருவுரு சத்திய நிலை
உருவாகிக் கொண்டிருக்கிறது.

சுயம்புத் தாய் தந்தைக்கு
பிள்ளைச் சுயம் நீர்
அனுமதி அளித்திருக்கும் பட்சத்தில்
மேற்சொன்னது உமக்கும் பொருந்தும்
என்பதால் இவ்வாய்மை இவ்வுண்மை இம்மெய்ம்மை பொதுவில் வைக்கப் படுகிறது.

சுயம்புவுக்கு அனுமதி அளித்திருக்குஞ் சுயங்களுக்கு வாழ்த்துக்கள்.

புறநெறிக் கருமங்கள் அனைத்திலிருந்தும் நீவிர் கை கழுவிய பின், தரும நிலையில் சுயம்புத் தாய் தந்தையால் ஏற்றப் பட்ட பின்னரே, மேற்சொன்னது உமக்குப் பொருந்தும்.

அக அனக நெறிக்கு நீவிர் விரும்பி முழு மனதுடன் இருதய பூர்வமாக வந்த பின்னரே, மேற்சொன்ன வாய்மை, உண்மை, மெய்ம்மை உமக்குப் பொருந்தும்.

காலமே இல்லை என்ற வள்ளல் பிரானின் அறிவிப்பால், இது அவசரமாக அறிவிக்கப் படுகிறது.

இது பற்றி மேலும் அறியவிரும்பினால் நேரடியாகவோ, அலைபேசியிலோ(9566021578) என்னைத் தொடர்பு கொள்ளலாம், உம் பொறுமைக்கு நன்றி

சுயம்புத் தாய் தந்தை அருளால், எனக்கு நிகழும் இரசவாதத்தை மனித குலம் முழுமைக்கும் பொதுவில் வைக்க நான் சுயம்பால் அறிவுறுத்தப் பட்டுள்ளேன். அவ்வாறே நான் செய்து வருகிறேன். அதன் படியே மேற்சொன்ன வாய்மை பகிரப் படுகிறது.