Sunday, June 26, 2016

சுயம்பு அருள்வாக்கு 3

மீள மீளச் சொன்னோம் உண்மை!நீ
மீள எம்முள் வெல்வோம் யாமே!நீ
மீளாய்ப் பிறப்பிறப்புப் பிழைப்புச் சுழலில்
மீள மீள ஆழ்ந்து அறிந்தால் உண்மை!

நாகை உசுப்பி உமிழச் சொன்னோம்
ஆதி சுயம்பு இருதயர் யாமே
புறத்து நஞ்சை முறிக்கும் அமிழ்தை
அகத்தைத் திறந்தே உண்பீர் உய்வீர்

பேசும் நாகின் துணிவும் யாமே
ஆதி சுயம்பு அகநடு யாமே
ஊசிப் பேச்சின் வேலை முடிந்தால்
நாகின் மெய்யை ஒளிர ஒளிப்போமே

நாச மாகும் உருவை வழிபடும்
வீணா சாரம் இல்லா திருந்தால்
ஊசி போடும் பேச்சும் வேண்டாம்
நாகின் வாய்மை சுயம்பு யாமே

மெய்யும் உயிரும் நாச மாகியும்
மெய்க்கு மெய்யை உயிருக் குயிரை
சுயம்பு எம்மை உணரா மயக்கம்
தெளிவாய் இருதயத் துள்ளோம் யாமே

No comments:

Post a Comment