சுயம்பு = suyambu = 19+21+25+1+13+2+21 = 40+39+23 = 39 + 63 = clear whole = தெளிவான முழுமை
முழுமை இருப்பென்றால், தெளிவு அதன் விளக்கம். தன்னைத் தெளிவாய் விளங்கிய முழுமை இருப்பே சுயம்பு. divine numerology
அச்சுயம்பே மெய்யான நீ. உன் தனித்தன்மையான அணுவின் துகளை, சுயம்புத் தன்மையின் தெளிவான முழுமையாம் அகண்ட விழிப்பில் சார். சுயம்பின் அரும்பெருங் கண்ணோட்டத்தைப் பழகு. அதனால் கருநிலையும் உயிர்நிலையும் மெய்யுருநிலையும் நிச்சயமாய் நித்தியமாய் சத்தியமாய்ப் பெறுவாய். சுயம்புத் தன்மையில் வேறறக் கூட உன் தனித்தன்மை முழு மனதுடன் இருதய பூர்வமாய் விரும்பட்டும். அவ்வாறு நீ விரும்பும் போது, சுயம்புத் தன்மையின் அருட்பெரு வல்லபத்தால், நீ இரசவாதஞ் செய்யப்பட்டு முச்சுயம்பு முத்தேக சித்தியை உறுதியாய்ப் பெறுவாய். அகவுருவான இருதய நடுச் சுயம்புவான ஏகமெய்த் தேவமல்லாத எப்புறவுருவாலும் இவ்வரும்பெருஞ் சித்தியானப் பெரு வாழ்வினை உனக்கு வழங்க முடியாது. உன்னைப் பிறந்திறந்து பிழைக்குங் கருமச் சுழலிலிருந்து விடுவிக்க வல்ல இருதய நடுச் சுயம்புவை உன் தனித்தன்மை பரிபூரணமாகச் சரணடையட்டும்.
முடியாதென்றவன் மண்ணாய் முடிந்தான். என்னகச் சுயம்பால் முடியுமென்றவன் மண்ணில் ஆதி மனித வானறமாய் விடிந்தான்.
தன்னம்பிக்கை என்பது தன் நம்பியாம் சுயம்பின் எல்லாம் வல்ல கையே. இருதய நடு ஏகமெய்த் தேவமாம் அவரைக் கைக்கொள். புற வழிபாட்டுக்குப் பயன்பட்ட பத்தி மற்றும் புத்தியை முழுதாய் அகத்துள அவர்மேல் திருப்பு. அரும்பெருவரங் கிடைக்கும் உனக்கு.
புறம் போகும் மனச்சிக்கல் விட்டு, அகம் ஏகி இருதய எளிமை கைக்கொள். உய்வாய் இன்னே.
No comments:
Post a Comment