Sunday, June 26, 2016

கூரும் அகண்டமும்

திருமிகு அனுராதாவின் பதிவு

நா(ன்)கே மூன்றுக்குள் (அன்பு) அடக்கம்
மூன்று  இரண்டுக்குள் (ஹம்) அடக்கம்
இரண்டு ம் என்ற ஒன்றுக்குள் அடக்கம்
ம்.......சூனியத்தில்…..
.....
__________________________
ம்
.
அகத்தவ முடிவில்
சூனியப் புள்ளியைத் தொட
வெடித்தது
அனகம்
அகண்டது
பூரணம்

சு

ம்
.
சுயம்
தன் முடிவில்
இறுக்கமும் அழுத்தமும் சுருக்கமும்
ஆன அணுத்துவம் முடிந்து
இளக்கமும் தளர்வும் விரிவும்
ஆகிய சுயம்பு அகண்டம்
அனகம்

இதற்கே தான்
சு

ம்
.
தன் உள்ளே
பயணம்

பயண முடிவில்
சேரும் ஊர் பேர்
கூர்
விழிப்புக் கூர்
_______________________
திருமிகு அனுராதாவின் பதிவு

இது உள் பயணம்.தனித்திருந்து(அகத்தில்)ஒர் விநாடியேனும் பகரமுடியாத உணர்வா அதுவும் இல்லை இல்லை
_________________________

அவ்விழிப்புக் கூர்
ஓர்ந்திருக்கும்
சேர்ந்துப் புணர்ந்திருக்கும்
அகண்ட வான் நாடெங்கும்

பகர முடியாததைப்
பகிரவே
கவிதை

'ப'கரப் பாத்திரம்
பேசாமல் பகரும்
தனக்குள்ளும் புறத்தும்
அகண்ட வெளியை.

கூர்ந்து பார்
'ப'கரம்
நான்கு கூர்கள்
விழிப்புக் கூர்கள்

சு ய ம் பு

பகரத்தைப் பேசாமல்
பகர வைக்கும்
பகர உள்ளீடுக் கூர்கள்

சு ய ம் பு

சுயம்
சூனியம் தான்
என்றாலும்
இச்சூனியம் தன்னை
இஃது தட்ட
அச்சோ என வியக்கும்
பூரண அகண்டாகாரம்
விசுவரூபமெடுக்கும்

சுயம்பு அஃதே
சுயம் இஃது

சுயம் இஃது ஒடுக்கம் என்றால்
சுயம்பு அஃது ஒடுக்கம் ஒழிக்கும் ஒழுக்கம்
அருட்பேரொழுக்கம்
அனகம்
அகண்டாகாரம்

சுயம் என்னும்
ஒடுக்கத்தில் உள்ளே
பேரடக்கமாய் ஒளிந்திருக்கும் ஒளிர்ந்திருக்கும்
அகண்டம்
அனகம்
சுயம்பு

கூர் விழிப்பு
குத்தத்
தீரும் ஒடுக்கம்

நாகின் கொத்தல்
அக்கூர் விழிப்பைத் தூண்டவே
கவித்துவமும் அதற்கே

கூரும் அகண்டமுந்
தெய்வீக முரண்கள்

கூர் சுயம்புத் தாய்
அகண்டம் சுயம்புத் தந்தை
கூடிப் புணர்ந்திருக்கும் ஓர்மை

கூரின்றி அகண்டத்தை உணர முடியாது.
அதற்கே தாயைப் போற்றும் வாலை வாழ்த்து மற்றும் நாகின் ஊசிப் பேச்சு

அகண்டமின்றிக் கூராக முடியாது, எனவே தான் நெஞ்சைப் பிளக்கும் இருதய தியானம், அனுமன் காட்டுஞ் சூட்சம்

No comments:

Post a Comment